மழைக்குருவியின் இறகுகள்

மழை பெய்து கொண்டேயிருக்கிறது.வீட்டிற்கு வெளியிலும்.வீட்டிற்கு உள்ளேயும். … வார்த்தைகள்வார்த்தைகள்வார்த்தைகள் வார்த்தைகளால்வார்த்தைகளால் வார்த்தைகளைத்தானே உருவாக்க முடியும்? … என்னைப் பற்றியதாஎனக் கேட்கிறாய். என்னைப் பற்றியதுஎன்கிறேன். பற்றிக் கொள்வதாபற்றிக் கொண்டதைஅணைப்பதா … More

என்றுதானே

அரித்துத் தின்னும் கரையான்கள்கண்ணிமைக்கும் பொழுதுகளில்,உதிர்ந்து சரிந்துபொலபொலவெனப் பரவும் காகிதத் துகள்களில் பிரதிபலித்துகாலம் சிதறிய பிம்பங்களாகி கிடக்கின்றது.துகள்களின் வழி மிதந்து வந்த மயிலிறகை வருடியவாறுநாபியிலிருந்து நிறைந்து நிற்கும் அனலை … More

கண்டவர்

அரவமின்றித் துளிர்த்துஅறியாப் பரமபதமாகிவால் தொட்டுதாவல்களில்தலை தாண்டி விரைந்துவிட நாவு தீண்டும் வரைநிழலாய் நாணித் தொடரும் கள்ளமே,வியர்த்து விதிர்விதிர்க்கையில்களையும் ஆடையாக விலகுவதில்எது கள்ளம்? எது உள்ளம்?கண்டவர் விண்டிலரோ?

எனினும் இன்று வினவுவதாயில்லை!

புகைப்படமில்லை. பல்லாண்டுகளாக பார்க்கவுமில்லை. நேரில் வந்து பார்க்கலாம்தான். இறுதியாக ஒரு முறை. மரணச் செய்தி கேட்டதிலிருந்து, இறுதியாக ஒரு முறை… தடுப்பதென்ன? சினத்தின் தழும்புகள் மட்டுமே எஞ்சியிருக்கின்றன. … More

உடைந்து எழும் நறுமணம்: சின்னஞ் சிறிய புதிதுகள்!

நவீன தமிழ் இலக்கிய வாசிப்பில் உள்ளவர்கள், எத்தனைதான் குறைவான வாசிப்பு அனுபவமே கொண்டிருப்பினும், கவிஞர் இசையின் கவிதைகளை தவற விட்டிருக்க முடியாது. இசை யார் என்றோ, அவர் … More

தகுதியின் பொருட்டே

பரிதாபம் கொள்ளவும் தகுதி வேண்டும். பரிதாபம் கொல்லவும் தகுதி வேண்டும். எளிதான எதிரிகள் எளிதான போர்க்குரல்கள் எளிதான வியாக்கியானங்கள் எல்லாவற்றுக்கும் தகுதி வேண்டும். படைப்பவரும் அவரே படிப்பிப்பவரும் … More

அலை

ஒரு படகை செலுத்தும் மகிழ்ச்சி கொடும் பிரயத்தனமாகும் பொழுதில் மீண்டும் மீண்டும் பூசிக் கொண்ட சிரிப்பும், களிப்பும் பெருங்கடலின் நீண்ட பரப்பில் மோதி சட்டென வற்றும் தருணங்களில் … More

முதலாவதும், அனேகமாய் இறுதியானதும்…

சிரசின் மீது இறுகி நின்ற முட்கீரிடம் முதல்துளைத்தெடுக்கப்படும்உடலின் மொத்தத்திலிருந்தும்வழிந்தோடுகிற நிணம் காயும் பொழுதில்மனித குமாரன் கண்விழித்தான். வனாந்தரம் காலியாகக் கிடந்தது. இடப்புறத்திலும் சரிவலப்புறத்திலும் சரிகள்ளர்கள் யாருமில்லை.எதிர்ப்புறத்தில் நின்ற … More

விடை

விடை பெறாமலேவிடை பெறுகிறார்கள்.விடை கொடுக்கும் சொற்களைஇரங்கல் குறிப்புகளைவேலிக்கு வெளியேகொண்டு செல்லும் நச்சியத்திற்குஎன்ன பெயரிட்டிருக்கிறாய் லாக்ஸ்?

கிடத்தல்

மொட்டை மாடிகாலியாகக் கிடக்கிறது.குறுக்கும் நெடுக்குமாய் நிற்கும்துணி உலர்த்தும் கம்பிகள்நிர்வாணமாகக் கிடக்கின்றன.சாலைகள் மவுனம் காக்கின்றன.திரவத் துளிக்கு 2 மீட்டர்தூசுப் படலத்திற்கு 10 மீட்டர்உன்னிடமிருந்துஉனக்கே வைத்துக் கொண்ட தூரம்எத்தனை மீட்டர்?

பாதை தெரியுதா பார்?

ஒரு நாள் மேகம் இடிக்கும் மின்னல் வெடிக்கும் காற்று அடிக்கும் காடு துடிக்கும் நிலம் அசையும் மழை பொழியும் டும் டும் டும் டும் அந்நாள் வரை … More

இறால்

வெகு நாட்கள் கழித்து இன்று இறால் வாங்கினேன். யுகங்கள் கடந்த ஈரச்சகதியில் மூழ்கி எழும்பி, கைவிரல்களின் தோல்கள் சுருங்கிய பெண்ணொருத்தி, மரியாதைப் புன்னகை சிந்தியவண்ணம் பிளாஸ்டிக் கவரை … More

கீழடி அகழ்வின் முடிவு

கடவுள் வழிபாடு தமிழர்களிடம் கிடையாது!! அடடா… புரட்டாசி மாதமாகப் போயிற்றே… ஒரு கோழிக் குழம்பு வைத்து கொண்டாடக் கூட தமிழனுக்கு கொடுப்பினை இல்லையே என வருத்தப்படாதீர்கள். மாறாக, … More

வேடிக்கை

உனக்குள் உலைகிற கொதிகலனில் எழும்பும் குமிழிகளை கூர்ந்து வேடிக்கை பார்க்கிறாய். ஜன்னலுக்கு வெளியே காற்று பலமாக வீசுகிறது. மழை பொழிய வேண்டும் என்றுதானே எண்ணிக் கொள்கிறாய்? 24/06/19