
திசைகளை மாற்றும்
புயற் காற்று
ஓங்கி வீசுகிறது…
மின்னல் வெட்டுகிறது…
கொடூரச் சுழல்
எதிர்பார்த்து காத்திருக்கிறது.
படகு நடுங்குகிறது…
இதயம் படபடக்க,
வெடித்தும், வெடிக்காமலும்
சினம் இரத்தம் குடிக்க,
உள்ளூர ஆவேசம்
கொந்தளித்த போதிலும்,
பற்களை கடித்துக் கொண்டு
துடுப்புகள் இடுகிறேன்.
கடல் சீறுகிறது.
இடையில் ஒரு பறவை
இடம் தர மறுத்ததாய்
கோபம் கொண்டு பறக்கிறது…
நான் உனக்கு
என்ன பதில் சொல்வேன்?
