முன்பொரு காலத்தில்
சில மணித்துளிகளுக்கு
நீயும், நானும்
வண்ணத்துப் பூச்சியோடு
விளையாடிக் கொண்டிருந்த பொழுதில்,
பின்னர்
யுகங்களுக்காய் உன் மெளனம் விரிந்த வேளையில்,
இலைகளில்
விழுந்த பனித் துளிகளை
காலத்தின் சந்தடியில்
தொலைத்து விட்டேன்.
மிஞ்சி நிற்பவை
பாலைவனத்தின் வெம்மையில்
வழியில் கிடந்த சில இலைகள் மட்டுமே…
9:22 மு.பகல் இல் செப்டம்பர் 25, 2008
Good one..
11:09 மு.பகல் இல் அக்டோபர் 3, 2008
நன்றி பாலமுருகன்.